புதன், 25 பிப்ரவரி, 2009

கீழக்கரை தெற்குதெரு ஜமாத் செயலாளர் லாஹித்கான் பதவி விலகினார்!

புதிய நிர்வாகிகள் தேர்வு!!

பிப்.24 கீழக்கரை தெற்குதெரு செயலாளர் லாஹித்கான் திடீரென்று பதவி விலகினார்.இதையடுத்து தெற்கு தெரு மஸ்ஜித் பரிபாலனக் கமிட்டியின் நிர்வாகக்குழுவின் கூட்டம் தலைவர் நல்ல முகம்மது களஞ்சியம் தலைமையில் நடைபெற்றது. புதிய செயலாளராக ஹாஜா நஜிமுதீன் ,உதவி தலைவராக முகம்மது இக்பால் , ஹக்லா மரிக்கா உதவி செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேற்க்கொண்ட தகவலை தெற்குதெரு ஜமாத் தலைவர் நல்ல முகம்மது களஞ்சியம் தெரிவித்தார்.

சனி, 14 பிப்ரவரி, 2009


துபாய் ஈமான் அமைப்பு இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் வேணு ராஜாம‌ணிக்கு ந‌ட‌த்திய‌ பாராட்டு விழா!



துபாய் ஈமான் அமைப்பு இந்திய‌ க‌ன்ச‌ல் ஜெனர‌ல் வேணு ராஜாம‌ணிக்கு 29.01.2009 வியாழக்கிழ‌மை மாலை ரெனைச‌ன்ஸ் ஹோட்ட‌லில் பாராட்டு விழாவினை ந‌ட‌த்திய‌து. இவ்விழா க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் வேணு ராஜாம‌ணி இர‌ண்டு ஆண்டு அமீர‌க‌த்தில் இந்திய‌ ம‌க்க‌ளுக்கு சிற‌ப்பான‌ சேவையினை ஆற்றி வ‌ருவ‌தை பாராட்டும் முக‌மாக‌ ந‌டைபெற்ற‌து.
நிக‌ழ்ச்சியின் துவ‌க்க‌மாக‌ காய‌ல் அல் ஹாபிஸ் முஹ‌ம்ம‌து இப்ராஹிம் இறைவ‌ச‌ன‌ங்க‌ளை ஓதினார். விழாக்குழு செய‌லாள‌ர் இறைவ‌ச‌ன‌த்தின் மொழியாக்க‌த்தை வாசித்தார்.
ஈமான் அமைப்பின் பொதுச்செய‌லாள‌ர் ஏ லியாக்க‌த் அலி வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.
த‌ங்க‌ம் செய்யாத‌தை ச‌ங்க‌ம் செய்யும் ‍ சைய‌த் எம் ஸ‌லாஹூத்தீன்
ஈமான் அமைப்பின் த‌லைவ‌ரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும‌ மேலாண்மை இய‌க்குந‌ர் சைய‌த் எம். ஸ‌லாஹுத்தீன் த‌லைமை தாங்கினார். அவ‌ர் த‌ன‌து த‌லைமையுரையில் ஈமான் அமைப்பு 1976 ஆம் ஆண்டு த‌மிழ‌க‌ முஸ்லிம்க‌ள் த‌ங்க‌ளுக்கிடையே ஒருங்கிணைப்பினை ஏற்ப‌டுத்திக் கொள்ளும் முக‌மாக‌ துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. எதிர்பாராத‌விதாமாக‌ ஏற்ப‌டும் சூழ‌லின் போது உத‌விடும் நோக்கில் இவ்வ‌மைப்பு செய‌ல்ப‌ட்டு வ‌ருகிற‌து.
இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ரல் வேணு ராஜாம‌ணி ம‌க்க‌ளை வ‌சீக‌ரிக்கும் தோற்ற‌ம் கொண்ட‌வ‌ர். எந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்திலும் எந்த‌ விஷ‌ய‌த்தை வேண்டுமானாலும் உரையாடும் திற‌ன் கொண்ட‌வ‌ர். இத்த‌கைய‌ வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்ப‌து அரிது. இந்திய‌ குடிய‌ர‌சு தின‌ விழா நிக‌ழ்ச்சியின் போது க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் இந்திய‌ அர‌புக் க‌லாச்சார‌ம் குறித்த‌ ஆய்வு நூல் எழுதிவ‌ரும் ப‌ணியினை மேற்கொண்டு வ‌ருவ‌தாக‌க் குறிப்பிட்டார். அவ‌ர‌து முய‌ற்சிக்கு நாம் உறுதுணையாக‌ இருப்போம்.
தான் அமீர‌க‌த்தில் ப‌ல்வேறு ப‌குதிக‌ளுக்கு செல்லும் போது அங்குள்ள‌ க‌ட்டிட‌ங்க‌ள் ஏதேனும் ஒரு வ‌கையில் ஈடிஏ நிறுவ‌ன‌ம், இந்திய‌ர்க‌ள‌து ப‌ங்க‌ளிப்பைப் ப‌றைசாற்றும் வித‌மாக‌ இருந்து வ‌ருவ‌தை நினைக்கும் போது பெருமித‌ம் கொள்ள‌ச் செய்கிற‌து என்றார்.
த‌ங்க‌ம் செய்யாத‌தை ச‌ங்க‌ம் செய்யும் என்பார்க‌ள். அத்த‌கைய‌ ப‌ணியினை ஈமான் அமைப்பு மெற்கொண்டு வ‌ருகிற‌து.
இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் வேணு ராஜாம‌ணிக்கு ஈமான் அமைப்பின் த‌லைவ‌ர் சைய‌த் எம். ஸ‌லாஹூத்தீன் பொன்னாடை அணிவித்து கௌர‌வித்தார். க‌ல்வ்க்குழுத் த‌லைவ‌ர் பி.எஸ்.எம். ஹ‌பிபுல்லாஹ் நினைவுப் ப‌ரிசு வ‌ழ‌ங்கினார். திரும‌தி வேணு ராஜாம‌ணிக்கு ம‌ரிய‌ம் ஸ‌லாஹுத்தீன் பொன்னாடை அணிவித்தார்.
ஏற்புரை நிக‌ழ்த்திய‌ இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் வேணு ராஜாம‌ணி த‌ன்னைக் கௌர‌வித்த‌ ஈமான் அமைப்பிற்கு ந‌ன்றியினைத் தெரிவித்தார். இது த‌ன‌து வாழ்வில் ஒரு ம‌றக்க‌ முடியாத‌ நாள் என‌க் குறிப்பிட்டார்.
த‌ன‌து தாய்மொழி த‌மிழாக‌ இருப்பினும் தான் கேர‌ளாவில் வ‌ள‌ர்ந்தேன். ஹிந்தி மொழியில் ப‌யின்றேன். அத‌னால் த‌மிழை ச‌ர‌ளாக‌ பேச‌ இய‌ல‌வில்லை என்றார். ஈமான் அமைப்பின் மூல‌ம் இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் அலுவ‌ல‌க‌த்தில் முஹ‌ம்ம‌து தாஹா சிற‌ப்பான‌ சேவையினை மேற்கொண்டுவ‌ருவ‌த‌ன் மூல‌ம் ஈமான் அமைப்பின் சேவையினை அறிய‌ முடிகிற‌து.
ஈமான் அமைப்பு வ‌ருட‌ந்தோறும் ர‌ம‌லான் மாத‌த்தில் ந‌ட‌த்தி வ‌ரும் இஃப்தார் எனும் நோன்பு திற‌ப்பு நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்கும் வாய்ப்பு பெற்றேன். தின‌மும் 4000 க்கும் மேற்ப‌ட்டோர் ப‌ல்வேறு இன‌,மொழி பேசும் ம‌க்க‌ள் ச‌கோத‌ர‌ வாஞ்சையுட‌ன் நோன்பு திற‌க்கும் நிக‌ழ்ச்சி என்னை மிக‌வும் க‌வ‌ர்ந்த‌து. மேலும் க‌ல்விப் ப‌ணிக்காக‌ ஈமான் அமைப்பு மேற்கொண்டு வ‌ரும் ப‌ணிக‌ள் ச‌முதாய‌ வ‌ள‌ர்ச்சிக்கு இன்றிய‌மையாத‌ ஒன்று.
இந்திய‌ அர‌புக் க‌லாச்சார‌ம் குறித்த‌ நூல் ஒன்றினைத் தயாரித்து வ‌ருகிறேன். கீழ‌க்க‌ரை, காய‌ல்ப‌ட்டிண‌ம் உள்ளிட்ட‌ ந‌க‌ர்க‌ள் அர‌புக் க‌லாச்சார‌த்துட‌ன் தொட‌ர்புடைய‌ த‌க‌வ‌லை திர‌ட்ட‌ உத‌வி வ‌ரும் நல்லுங்க‌ளுக்கு ந‌ன்றி தெரிவிக்க‌ க‌ட‌மைப்ப‌ட்டுள்ளேன்.
மேலும் ஈமான் அமைப்பின் த‌லைவ‌ர் சைய‌த் எம் ஸலாஹுத்தீன் ஈடிஏ என்னும் நிறுவ‌ன‌ம் 60,000 க்கும் மேற்ப‌ட்ட‌ இந்திய‌ ம‌க்க‌ள் ப‌ணிவாய்ப்பு பெற‌ உத‌வி வ‌ருவ‌த‌ற்கு பாராட்டு தெரிவித்தார்.
திரும‌தி வேணு ராஜாம‌ணி த‌ங்க‌ள‌து இத‌ய‌த்தை தொடுவ‌தாக‌ இந்நிக‌ழ்வு அமைந்துள்ள‌தாக‌ தெரிவித்தார்.
ஈமான் அமைப்பின் க‌ல்விக்குழுத்த‌லைவ‌ர் பி.எஸ்.எம். ஹ‌பிபுல்லாஹ் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வ‌ரும் க‌ல்வி மேம்பாட்டுப் ப‌ணிக‌ள் குறித்து விவ‌ரித்தார். விரைவில் திருச்சியில் ஈமான் அமைப்பு ப‌ள்ளிக்கூட‌ம் ஒன்றினைத் துவ‌ங்க‌ இருப்ப‌தாக‌ தெரிவித்தார். உய‌ர்க‌ல்வி உத‌வித்திட்ட‌ம் சாமான்ய‌ மாண‌வ‌ர்க‌ள் உய‌ர்க‌ல்வி க‌ற்க‌ பெரிதும் உத‌வி வ‌ருகிற‌து என்றார்.
ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் ஈமான் அமைப்பின் மூல‌ம் இதுவ‌ரை சுமார் 300 க்கும் மேற்ப‌ட்ட‌ மாண‌வ‌ர்க‌ள் ம‌ருத்துவ‌ம், பொறியிய‌ல் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு தொழிற்ப‌யிற்சிக‌ளை ப‌டித்து நிறைவு செய்துள்ள‌தாக‌ தெரிவித்தார். ர‌மலான் இஃப்தார், இஸ்லாமிய‌ நிக‌ழ்ச்சிக‌ள், இந்திய‌ ம‌க்க‌ளுக்கு உத‌விடும் ப‌ணிக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு ப‌ணிக‌ளை விவ‌ரித்தார்.
இந்திய‌ க‌ம்யூனிட்டி வெல்ஃபேர் க‌மிட்டி ஒருங்கிணைப்பாள‌ர் கே. குமார், ச‌மூக‌ சேவ‌க‌ர் ம‌ருத்துவ‌ர் சைல‌ஜா மேன‌ன் உள்ளிட்டோர் கௌர‌விக்க‌ப்ப‌ட்ட‌ன‌ர்.
துணைத்த‌லைவ‌ர் க‌விஞ‌ர் அப்துல் க‌த்தீம் நிக‌ழ்ச்சியினை தொகுத்து வ‌ழ‌ங்கி ந‌ன்றியுரை நிக‌ழ்த்தினார்.
நிக‌ழ்ச்சிக்கான‌ ஏற்பாடுக‌ளை ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, ஹிதாய‌த்துல்லாஹ், முதுவை ஹிதாய‌த், ஹ‌மீது யாசின், ஹ‌மீதுர் ர‌ஹ்மான், இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்ட‌ நிர்வாகிக‌ள் செய்திருந்த‌ன‌ர்.
நிக‌ழ்ச்சியில் ஈமான் அமைப்பின் பேராள‌ர்க‌ள், ச‌மூக‌ ஆர்வ‌ல‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

சித்திக் ரஹ்மான் (கண்ணாடி அணிந்தவர்)

ரயிலில் தவறவிட்ட 30 ஆயிரம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தார்!


கீழக்கரை இளைஞருக்கு பாராட்டு!!



கீழக்கரை பிப்.14. கீழக்கரை பச்சிலை தெருவை சேர்ந்தவர் சித்தீக் ரஹ்மான்(வயது 34) இவர் ரயிலில் சென்னையிலிருந்து குடும்பத்துடன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் . ரயில் பரமக்குடியை கடந்த சிறிது நேரத்தில், ரயிலின் நடைபாதையில் பர்ஸ் ஒன்று அநாதையாக கிடந்தது. பர்சை கண்டெடுத்த சித்தீக் ரஹ்மான் அதில் ரூ. 30 ஆயிரம்பணமும் , ஓட்டுநர் உரிமமும் இருப்பதை அறிந்தார். உடனடியாக அதில் உள்ள முகவரி மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.பின்னர் அது இளையாங்குடியை சேர்ந்த கருப்பசாமி(வயது 33) என்பவரின் பர்ஸ் என்பதும்,அவர் சென்னையில் இருந்து பரமக்குடியில் இறங்கும் போது பர்சை தவற விட்டதாகவும்தெரிய வந்தது .

அன்றே கீழக்கரைக்கு தனது உறவினருடன் வந்த கருப்பசாமி சித்தீக் ரஹ்மான் வீட்டிற்க்கு சென்று கண்ணீர் மல்க பணத்தை பெற்றுக் கொண்டார்.
பரமக்குடி ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரை கருப்பசாமி வாபஸ் பெற்றார்.
சித்திக்கிற்க்கு நன்றி தெரிவித்த கருப்பசாமி கூறியதாவது, நேர்மை தவறாதவர்கள் வாழந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் கீழக்கரை என்பதில் சந்தேகமில்லை என்பதை சித்தீக் ரஹ்மான் நிரூபித்து விட்டார்.அவரின் நேர்மை என்னை கண் கலங்க செய்து விட்ட்து என்றார்.



பொதுமக்கள் சித்திக் ரஹ்மானின் நேர்மையான் செயலை பாரட்டினர்

வெள்ளி, 13 பிப்ரவரி, 2009



இம்பாலா உசேன்




பசீர் அகமது

கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தை சீர்குலைக்க சதி!
நகராட்சி தலைவர் ஆவேசம்!!

கீழக்க்ரை பிப். 13கீழக்கரை நகரசபை கூட்டம் தலைவர் பசீர் தலைமையில் நடந்தது நிர்வாக் அதிகாரி சுந்தரம் தலைமை வகித்தார்.

கீழ்கண்டவாறு விவாதம் ந்டைபெற்றது
தலைவர் : அ ண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் பெத்தரி தெருவில் நீர் தேக்க தொட்டி அமைக்க ரூ19லட்சமும் வடக்கு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்க 21லட்சமும் பஸ் நிலையம் முதல் முத்துசாமிபுரம் வரை தார் சாலை அமைக்க 14லட்சமும்,இஸ்லாமியா பள்ளி அருகே சாலை அமைக்க 3.7லட்ச்மும் இன்னும் சில திட்டங்களுக்கும் சேர்த்து மொத்தம்79லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இம்பாலா முகம்மது உசேன்: இந்த திட்ட பணிகளுக்கு விடப்பட்ட ஒப்பந்தம் கோருவதில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளது.

நிர்வாக அதிகாரி: இது தவறான் குற்றச்சாட்டு அரசு விதிமுறைப்படியே டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தலைவர் பசீர்: நகரசபை நிர்வாகம் முறையாக நடந்து வருகிறது. இதை சீர்குலைக்க சிலர் சதி செய்து வருகின்றனர் இதை முறிய்டிக்க கவுன்சிலர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் .

இவ்வாறு விவாதம் நடைப்பெற்றது.





கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் - துபாய் நிர்வாகிகள்

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் துபாய் அமைப்பு ,ஹமீதியா பள்ளிகள் முன்னாள் மாணவர்கள் சங்கமாக ஒருங்கினைக்கப்ப்டுமா?


துபாய்.பிப்.13 . துபாயில் பணிபுரியும் கீழக்கரை ஹ்மீதியா மெட்ரிக் பள்ளி முன்னாள் மாணவர்கள் இனைந்து மாணவர்க்ள் சஙகம் அமைத்து பல் வேறு நலப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தலைவராக் ஆலிம், துனை தலைவராக ஹாரிஸ், செயலளராக அத்ஹம் , துனை செயலளராக ராசிக்,பொருளாலராகஜெயினுலாப்தீன், துனன பொருளலராக் சாவன்னா , ஒருங்கினப்பாளராக் ஹ்மீது யாசின் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் ஹமீதியா மாணவர்கள் கூறிய்தாவது ,அமீரகத்தில் ஏராளமான ஹமீதியா மேல் நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்களும் உள்ளனர். அவர்களும் மெட்ரிக் மாணவர் சங்கமும் இனைந்து கீழக்கரை ஹமீதியா முன்னாள் மாணவர்கள் சங்கமாக செயல்பட்டால் இன்னும் முனைப்புடன் பல் வேறு நலப்பணிகளை மேற்க்கொள்ளலாம்.

இது குறித்து ஹமீதியா மெட்ரிக் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் துனை
செயளாலர் ராசிக் கூறியாதாவது,
வரவேற்க்க தக்க கருத்து ,விரைவில் ஒருங்கினைப்பதற்கான முயற்சிகள் மேற்க்கொள்ளப்படும் என்றார்

மணிகண்டன்

மயான சுற்றுசுவர் கட்ட எதிர்ப்பு
கீழக்கரையில் பதற்றம், சாலை மறியல் 40 பேர் கைது
!

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் நகராட்ச்சிக்கு சொந்தமான மயானம் உள்ளது.
மயானத்திற்க்கு சுற்றுசுவர் மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்த நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சுற்றுசுவர் எழுப்ப சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் .தங்களுக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் உள்ளூர் நிர்வாகம் மறுத்து விட்டது .
கலெக்டர் உத்தரவின் பேரில் கடந்த 5ம் தேதி நகராட்சி நிர்வாக அதிகாரி
சுந்தரம் தலைமயில் மயானத்திற்கு சுற்று சுவர் அமைக்கும் பணி துவங்கியது.


இந்நிலையில் நேற்று கவுன்சிலர் 21வது வார்டு கவுண்சிலர் மணிகண்டன் தலைமையில் சிலர் சுற்றுசுவர் கட்டுவர்தற்கு எதிர்ப்பு தெரிவித்து கீழக்கரையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி செந்தில் வேலன் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.கலைந்து செல்ல மறுத்ததால் தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்ட 26 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்ட்டது

தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ஏராள்மான போலீசார் குவிக்கப்படுள்ளனர்.

வியாழன், 12 பிப்ரவரி, 2009


பசீர் அகமது

கீழக்கரை முழுவதும் புதிய குடிநீர் இணைப்பு குழாய்கள் நகராட்சி தலைவர் தகவல்!

பிப்.13.கிழக்கரையில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் ராமாநாத மாவட்ட கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்க உள்ளது
இன்னும் சில மாதங்களில் கீழக்கரையில் குடிநீர் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் பொதுமக்கள் உள்ளனர்.

இதுகுறித்து கீழக்கரை ந்கராட்சி தலைவர் பசீர் அகமது கூறியதாவது.
விரைவில் கீழக்கரையில் குடிநீர் திட்டம் திட்டம் செயல்படுத்தப்படும் .

கீழக்கரை நகர் முழுவதும் உள்ள குடிநீர் இணைப்பு குழாய்கள் பழுதடைந்து உள்ளதால் சாக்கடை தண்ணீர் கலக்கும் சூழ்நிலை உள்ளது. குழாய்கள் அணைத்தையும் மாற்றுவதற்கும் புதிய குழாய்கள் அமைப்பதற்கும் தமிழக அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.