வெள்ளி, 13 பிப்ரவரி, 2009


மணிகண்டன்

மயான சுற்றுசுவர் கட்ட எதிர்ப்பு
கீழக்கரையில் பதற்றம், சாலை மறியல் 40 பேர் கைது
!

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் நகராட்ச்சிக்கு சொந்தமான மயானம் உள்ளது.
மயானத்திற்க்கு சுற்றுசுவர் மற்றும் தண்ணீர் வசதி ஏற்படுத்த நகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் சுற்றுசுவர் எழுப்ப சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் .தங்களுக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் உள்ளூர் நிர்வாகம் மறுத்து விட்டது .
கலெக்டர் உத்தரவின் பேரில் கடந்த 5ம் தேதி நகராட்சி நிர்வாக அதிகாரி
சுந்தரம் தலைமயில் மயானத்திற்கு சுற்று சுவர் அமைக்கும் பணி துவங்கியது.


இந்நிலையில் நேற்று கவுன்சிலர் 21வது வார்டு கவுண்சிலர் மணிகண்டன் தலைமையில் சிலர் சுற்றுசுவர் கட்டுவர்தற்கு எதிர்ப்பு தெரிவித்து கீழக்கரையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி செந்தில் வேலன் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.கலைந்து செல்ல மறுத்ததால் தடியடி நடத்தி மறியலில் ஈடுபட்ட 26 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்ட்டது

தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ஏராள்மான போலீசார் குவிக்கப்படுள்ளனர்.

1 கருத்து: