வியாழன், 12 பிப்ரவரி, 2009


பசீர் அகமது

கீழக்கரை முழுவதும் புதிய குடிநீர் இணைப்பு குழாய்கள் நகராட்சி தலைவர் தகவல்!

பிப்.13.கிழக்கரையில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் ராமாநாத மாவட்ட கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்க உள்ளது
இன்னும் சில மாதங்களில் கீழக்கரையில் குடிநீர் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் பொதுமக்கள் உள்ளனர்.

இதுகுறித்து கீழக்கரை ந்கராட்சி தலைவர் பசீர் அகமது கூறியதாவது.
விரைவில் கீழக்கரையில் குடிநீர் திட்டம் திட்டம் செயல்படுத்தப்படும் .

கீழக்கரை நகர் முழுவதும் உள்ள குடிநீர் இணைப்பு குழாய்கள் பழுதடைந்து உள்ளதால் சாக்கடை தண்ணீர் கலக்கும் சூழ்நிலை உள்ளது. குழாய்கள் அணைத்தையும் மாற்றுவதற்கும் புதிய குழாய்கள் அமைப்பதற்கும் தமிழக அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.